Monday, August 21, 2017
நாயை போல் அல்ல நாம்...
Saturday, December 17, 2011
இதழ்
உடைந்து சிதறிய
முகக்கண்ணாடியின்
சில்லு ஒன்று
அவள் இதழில்…
கரத்தில் எடுத்தால்
வலி பொறுக்க மாட்டாளெண்னி
என் இதழால்
சில்லை எடுத்து
உயிர்ந்து கிளம்பிய
குருதியை சுவைத்தால்
ச் சீய்.. போடா..
ரத்த காட்டேரி என்கிறாள்..
Thursday, October 20, 2011
ஒற்றை வார்த்தை.
சுயம் அற்ற ,
சூன்யமாய் இருந்தாலும்,
நம்பிக்கை என்ற
ஒற்றை வார்த்தையிலேயே
தினமும்
தொடங்குகிறது,
வாழ்க்கை...
Friday, February 25, 2011
சென்னை பதிவர் சந்திப்பு--26/02/2011
அன்பான பதிவர்களே,
டிசம்பர் சீஸன் இசைக்கச்சேரி போல டிசம்பர் மாதம் நம் பதிவர்களின் புத்தக வெளியீடு நிகழ்வுகளாய் இருந்ததினால் பதிவர் சந்திப்பு நடத்த முடியாமல் போனது.
இதோ, பதிவர் சந்திப்பு இந்த வாரம் 26/2/2011 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை K.K. நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற உள்ளது.
அவ்வமயம், தமிழ் திரையுலகில் தென்மேற்கு பருவகாற்றாய் வீசிய இப்பட்த்தின் இயக்குனர் திரு.சீனுராமசாமி, நம் பதிவர்களை சந்திக்க மிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிங்கை பதிவர் சகோதரர் ஜோசப் பால்ராஜ் சென்னையில் உள்ளார், பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
மேலும், நம் பதிவர்கள் ,
சென்னையில் இந்த பிப்ரவரி மாத்தில் மழை பெய்கிறது , அப்படியானல் அண்ணன் கேபிள் சங்கர் ஏதேனும் நாவல் எழுதுகிறாரா? ,
மயில் ராவணனால் உருவாக்கப்பட்ட ஜெய் ஜாக்கி சங்கத்தின் நோக்கம் என்ன ?
பிரபல பதிவர் சட்டமன்ற உறுப்பினருக்கான நேர்காணலில் கலந்து கொள்கிறாரா?
கவுதம் பீட்டர் மேன்னின் நடுநிசி நாய்கள் படம் பார்த்த நம் பதிவர் அதிஷா, மிக்க மனநலம் பாதித்துள்ளார் , அதற்கான காரணம் என்ன ?
பட்டர் பிளை சூர்யா எங்கே போனார் ?
கிழக்கின் டிஸ்கவுண்ட் சேல்ஸ் ஒரு பார்வை.
இவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கான பதிவர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து பதிவர்களும், வாசகர்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நேரம் : மாலை 6 மணி
தேதி : 26/02/11
கிழமை: சனிக்கிழமை
சிறப்பு விருந்தினர் : இயக்குனர் திரு. சீனு ராமசாமி.
அன்புடன் ,
காவேரி கணேஷ்
Thursday, December 30, 2010
கவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.
கவிஞர் ராஜ.சுந்தரராஜன் கவிதை தொகுப்பினை வெளியிட, திரு,ஜ்யோவ்ரம் சுந்தர் பெற்றுக்கொள்கிறார்
கவிஞர் ராஜசுந்தரராஜன் சிறப்புரை.
ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களின் சிறப்புரை.
Tuesday, December 14, 2010
சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..
பதிவர், தற்பொழுதைய சமகால கவிஞர் நர்சிம்..
அகநாழிகை வாசு.
மணிஜி தண்டோரா, உண்மை தமிழன்.
பதிவர்கள் லக்கிலுக், அதிஷா, எழுத்தாளர் ஷோபாசக்தி.
பின் வரிசையில் பதிவர்கள் அஷோக், மயில் ராவணன்.
பதிவர் ஜாக்கி,சேகர், நித்யா, உண்மை தமிழன்.
பின் வரிசை கே.ஆர்.பி செந்தில், கேபிள் சங்கர்
பதிவர் நர்சிம் , லக்கிலுக்
பத்திரிக்கையாளர் கவின் மலர், எழுத்தளார் சோபா சக்தி.
உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை
சாருவின் வாசக நண்பர்கள் புத்தக்தை பெற்று கொண்ட நிகழ்வு.
பதிவர் நர்சிம் புத்தக்த்தை பெற்று கொண்டார்.
சாருவின் மனைவி அவந்திகா அவர்கள் புத்தகம் பெற்று கொண்டார்.
நல்லி அவர்கள் வரவேற்புரை
சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் புத்தக அறிமுக உரை
கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் புத்தக விமர்சன உரை.
கவிஞர் கனிமொழி அவர்கள் சிறப்புரை.
மதன் அவர்களின் உரை, மிக சிறப்பாகவும், அவரின் படிப்பாற்றல் மிகவும் வெளிப்பட்டது.
நந்தலாலா மிஷ்கின் உரை.