Thursday, December 30, 2010

கவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.


நண்பர், பதிவர், யாத்ராவின் “மயிரு” , கவிதை தொகுப்பு அகநாழிகை பதிப்பகத்தால் மிகச்சிறப்பாக , சென்னை K.K.நகர் , டிஸ்கவரி புக் பேலஸில்,நடந்தது.

சுமார் 50 பேருடன் நடந்த இந்த விழா , வந்திருந்தவர்களின் கருத்து, பரிமாற்றத்துடன் நடந்த நிகழ்வு என சொல்லலாம்.

அகநாழிகை பதிப்பகத்தால் , நேர்த்தியாக வடிவமைக்கபட்ட தாளில்,
லேமினேட் செய்யப்பட்டு, “ மயிரு ”, கவிதை தொகுப்பு,
கவிஞர் ராஜ சுந்தரராஜன் அவர்களால் வெளியிடப்பட்டு,
பதிவர், கவிஞர் ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரையாற்ற,கவிஞர் ராஜ சுந்தரராஜன், ஜ்யோவ்ரம் சுந்தர் சிறப்புரையாற்றினர்.

கவிதை தொகுப்பின் நூலாசிரியர் யாத்ரா அவர்கள் கவிதை தொகுப்பையும், தான் கடந்து வந்த பாதையையும் எடுத்துரைத்தார்.

முடிவில், பொன்.வாசுதேவன் நன்றியுரையாற்ற விழா இனிதே முடிந்தது.

வந்திருந்த பதிவர்கள் ,

மணிஜி, கேபிள் சங்கர், சிவராமன், ஜ்யோவ்ரம் சுந்தர், பொன்.வாசுதேவன் ,
மயில் ராவணன், ஷங்கர், வசுமித்ரன், உயிரோடை லாவண்யா, நர்சிம், லக்கிலுக், அதிஷா, விமலாதித்த மாமல்லன், பெஸ்கி, சாம்ராஜ்ய பிரியன், முத்துவேல், குகன், அசோக், விஜய மகேந்திரன், புரூனோ,உழவன், இன்னும் சிலர்.

விழாவின் புகைப்படங்கள்.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரை.
கவிஞர் ராஜ.சுந்தரராஜன் கவிதை தொகுப்பினை வெளியிட, திரு,ஜ்யோவ்ரம் சுந்தர் பெற்றுக்கொள்கிறார்

கவிஞர் ராஜசுந்தரராஜன் சிறப்புரை.

ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களின் சிறப்புரை.




யாத்ரா அவர்களின் ஏற்புரை.

மயில்ராவணனுடன் , எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.


அன்புடன்,

காவேரி கணேஷ்.




Tuesday, December 14, 2010

சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 7 புத்தகங்களின் நூல் வெளியீடு மிக சிறப்பாகவும், விமர்சையாகவும் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
மாலை 5.45 மணிக்கு சென்றால் , நம் பதிவர்கள் 30 பேர் வரை வந்திருந்தார்கள்.
சாருவும், அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தவர்களை உபசரித்து, மாலை நேரத்து காபியும், சமோசாவையும் சாப்பிடுமாறு மிகவும் பணித்தார்கள்.

காமராஜர் அரங்கம் போன்ற மிகபெரிய அரங்கத்தில், புத்தக வெளியீடு நடத்துவது என்பது ஒரு எந்திரன் திரைப்பட வெளியீட்டை போல செய்யவேண்டிய விசயம், அதையும் சாரு வெற்றி கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.அரங்கம் 60 சதம் நிரம்பியிருந்தது, அதிலும் முக்கியம் இரவு 10 மணி வரை வாசகர்கள் இருந்தனர் என்பது சாருவுக்கு வாசகர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்பதே சான்று.

எழுத்தாளர் பாலகுமாரன் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தார், அவரின் கடலோர குருவிகள் நாவலை 100 முறையாவது படித்திருப்பேன்.


உயிர்மைப்பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்ற,

நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்க , நல்லி அவர்கள் புத்தகம் வெளீயிட, புத்தகங்களை சாருவின் வாசக நண்பர்கள் பெற்று கொண்டது மிகச்சிறப்பு.

அதிலும், நம் நண்பர், பதிவர் நர்சிம் அவர்கள், சாருவின் சரசம், சல்லாபம், சாமியார் நித்தியானந்தர் பற்றிய புத்தகத்தை பெற்று கொண்ட பொழுது கைத்தட்டலும், விசிலும் பறந்தது.

நம் பதிவர்களின் கைத்தட்டலும், விசிலும் சாருவின் விழாவிற்கு மெருகூட்டியது எனலாம், பேச்சாளர்களின் பேச்சுகளை அவ்வளவு உற்சாகப் படுத்தினார்கள்.

வந்திருந்த பதிவர்கள்:



மணிஜி,அகநாழிகை வாசு,நித்யகுமாரன்,உண்மைதமிழன்,நர்சிம்,லக்கி,நிலாரசிகன்,அதிஷா,சாம்ராஜ்யபிரியன்,ராஜபிரியன்,ஜியரோம்சுந்தர்,
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..


மேலும், விழா பற்றிய விபரம் அறிய நண்பர் ஜாக்கியின் தளத்தை பார்க்கலாம்.



இனி, புகைப்படங்கள்:

பதிவர் பட்டர் பிளை சூர்யா.
பதிவர், தற்பொழுதைய சமகால கவிஞர் நர்சிம்..
அகநாழிகை வாசு.
மணிஜி தண்டோரா, உண்மை தமிழன்.
பதிவர்கள் லக்கிலுக், அதிஷா, எழுத்தாளர் ஷோபாசக்தி.

பின் வரிசையில் பதிவர்கள் அஷோக், மயில் ராவணன்.
பதிவர் ஜாக்கி,சேகர், நித்யா, உண்மை தமிழன்.

பின் வரிசை கே.ஆர்.பி செந்தில், கேபிள் சங்கர்
பதிவர் நர்சிம் , லக்கிலுக்
பத்திரிக்கையாளர் கவின் மலர், எழுத்தளார் சோபா சக்தி.


உயிர்மை மனுஷ்யபுத்திரன் வரவேற்புரை
சாருவின் வாசக நண்பர்கள் புத்தக்தை பெற்று கொண்ட நிகழ்வு.
பதிவர் நர்சிம் புத்தக்த்தை பெற்று கொண்டார்.




சாருவின் மனைவி அவந்திகா அவர்கள் புத்தகம் பெற்று கொண்டார்.
நல்லி அவர்கள் வரவேற்புரை
சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் புத்தக அறிமுக உரை
கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் புத்தக விமர்சன உரை.
கவிஞர் கனிமொழி அவர்கள் சிறப்புரை.
மதன் அவர்களின் உரை, மிக சிறப்பாகவும், அவரின் படிப்பாற்றல் மிகவும் வெளிப்பட்டது.
நந்தலாலா மிஷ்கின் உரை.


சாரு அவர்களின் புத்தக வெளீயிடு விழா, டிசம்பர் மாத இசை கச்சேரி போன்று , செவிக்கும், சிந்தனைக்கும் விருந்து வைத்த விழா என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் புத்தக விமர்சன உரை.