Saturday, June 5, 2010
பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் 05/06/2010
மெரினாவில் காந்தி சிலை
மிக நீண்ட நெடுநாட்களுக்கு பின் பதிவர் சந்திப்பு நடந்தது, மொத்தம் 35 பதிவர்கள் வந்திருந்தனர்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன் நோட்டு சகிதம் வந்திருந்த பதிவர்களின் வருகையை பதிவு செய்தார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ள பதிவர் சிறில் அலெக்ஸ் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டு, மற்ற பதிவர்கள் அறிமுகபடுத்திக்கொண்டனர்.
தற்பொழுதைய பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தும் எண்ணத்திற்கான விசயங்கள் பேசப்பட்டன.
பதிவர் சிறில் , அமெரிக்க பெட்ரோல் விலையை இந்தியாவின் விலையோடு ஒப்பிட்டு பேசினார்.
பாலபாரதியும், யுவகிருஷ்ணாவும் தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கான தன்னார்வலர்களை எதிர்னோக்குவதாக அறிவித்தனர்.
தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் இணைய பதிவர்களுக்கான அரங்கம் , தமிழக அரசால் வழங்கபடுகின்றது, அவ்வமயம் வரும் தமிழ் மக்களுக்கு இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி, பதிவர் ஆவது எப்படி, பதிவு எழுதுவது எப்படி என்பதனை தெரிவிக்க தன்னார்வலர்களை நம்பதிவர்களிடம் கேட்கிறார்கள்.
விருப்பபடும் பதிவர்கள் பதிவர் பாலபாரதியையும் , லக்கி யுவகிருஷ்ணாவையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வரும் தமிழ் ஆர்வலர்களில் இணைய வசதி இல்லாதவர்களிடம் , தமிழ் சாப்ட்வேர்கள் உள்ள குறுந்தட்டுகளை இலவசமாக வழங்க உள்ளார்கள். நம்பதிவர்கள் குறுந்தட்டுகளில் தமிழ் சாப்ட்வேர்களை பதிய செய்து இலவசமாக வழங்கலாம்.
நம்பதிவர் ஜாக்கி சேகர் , மூத்த பதிவர் மா.சிவகுமார் தம்மிடம் கொடுத்த தமிழ் எழுத்துக்கள் கொண்ட கீ.போர்டு ஸ்டிக்கர்களை வழங்குவதாக அறிவித்தார்..
கூட்டம் இனிமையாகவும் , அமைதியாகவும் நிறைவு பெற்று, தேனீர்கடை நோக்கி பயணித்தது.
இனி, புகைப்படங்கள்:
பதிவர்கள் டாக்டர் புரூனோ, ஜாக்கி, பலாபட்டறை ஷங்கர், தண்டோரா, ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்,ரவிஷங்கர், அன்பு.
பதிவர்கல் விக்கி,சிறில் அலெக்ஸ்,டாக்டர் புரூனோ, ஜாக்கி
பதிவர்கள் கலந்துரையாடல்
இடமிருந்து , பதிவர் அன்பு,விக்கி, சிறில் அலெக்ஸ், புதிய பதிவர்கள்
புதிய பதிவர்கள் வருகை
சந்தோச வெள்ளத்தில் நம் பதிவர்கள்
பதிவர் ஜாக்கி சேகர், பலாபட்டறை ஷங்கர், சங்கர், ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்
வெள்ளையுடையில் தண்டோரா
விரிவான கலந்துரையாடலில் பாலபாரதி, டாக்டர் புருனோ, அதிஷா, ரவிசங்கர்
கேபிளார்
இளம் பதிவர் சுகுமார்
மின்னொளியில் மெரினா
பதிவர்கள் சாம்ராஜ்ய பிரியன், அப்துல்லா
நடுவில் பலாபட்டறை சங்கர்
பதிவர்கள் சுகுமார், ஷ்ரி, ஜாக்கி சேகர்
ஜ்யோவரம் சுந்தர், டோண்டு ராகவன், லக்கிலுக்
தேனீர் கடையில் பதிவர்கள்
தல பாலபாரதி
பதிவர் அப்துல்லா சிங்கை பதிவர் ஜோசப் பால்ராஜுடன் தொலைபேசியில் பதிவர் சந்திப்பு குறித்து வர்ணனை
Subscribe to:
Posts (Atom)