சூரியனை காதலித்த “ சூரியகாந்தி’’
கிராமத்தில் எங்களின் வீடு
அந்தி சாயும் வேளையில் கம்மா--ஓ அய்யனார் கம்மாவாக இருக்குமோ ?
ஆவாரம் பூவூ-- ஆறேழு நாளா நீ போகும் பாதையில் பூத்திருக்கு.
தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழும் மனநலம் பாதித்த சிறுவன்.
கிராமத்து “ பசங்க”
பாரம் சுமந்த காளை பணி முடித்து பட்டியில் கட்ட போறான் எங்க ஊர் ராஜா--கேட்டரிங் மாணவன்.
மாடுவும், கன்றும் மாலை வேளையில் பசியாறும் காட்சி.
கோழியின் பின்னே சேவல்கள் --புணர்ச்சியின் காலமோ
அறுவடை முடிந்தபின் எஞ்சியுள்ள வைக்கோல் படப்பு, கால்நடைக்கு வருடத்தின் வாழ்வாதாரம்.
சோளம் விதக்கையிலேலேலேலே..............இளையராசாவின் குரல் காற்றில் ஒலிக்கிறது.
பட்டணத்து அவசர கதியில் மறந்தே போன கள்ளி செடி
இவ்வருட கருணை காட்டாத வருண பகவானால் அடி மட்டத்தில் கிணற்று நீர்
மாடு கன்ணு மேய்க்க, மேய்கறத பாக்க
வளர்ந்த நெற்பயிரினருகே வீசும் காற்றை , சுவாசிக்க ,பட்டணத்து கார்பன் காற்று வெளியேறியது.
Tuesday, December 29, 2009
Wednesday, December 16, 2009
Sunday, December 13, 2009
சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீட்டின் தொகுப்பும்,புகைப்படங்களும்
L வரிசையில் முதலாவது இருக்கையில் அயல்நாட்டு பதிவர் துளசி கோபால் அவர்கள்
புத்தகம் வெளியிட்ட சா.கந்தசாமியுடன், 10 புத்தகங்களை பெற்று கொண்டவர்கள்,விழா நாயகன் சாரு
விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.
விழாவின் தொகுப்பு:
சாருவை இதற்கு முன்னர் நான் பார்த்திரவில்லை. வெள்ளியன்று நடந்த அகநாழிகை புத்தக வெளியீட்டில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு, 1/2 மணி நேரம் பல விசயங்களை விவாதித்தோம், குறிப்பாக புத்தகம் எழுதும் பழக்கம்,வாசிக்கும் பழக்கம் நம் குடும்பத்தினரிடையே எப்படி எடுத்துக்கொள்ளபடுகிறது என்பது விவாதிக்கபட்டது.
மிக எளிமையான, பந்தா இல்லாத எழுத்தாளராக k.k நகர் சாலையில் பேச்சு நீண்டது.அவரின் 10 நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தந்து வரும் படி அழைத்தார்.
10 நூல்களை எழுதுவது என்பது சாதாரணமான விசயமல்ல,அதோடு இந்த வருடம் மொத்தம் 90 நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் பாராட்டதக்கது.
மனுஷ்ய புத்திரன் வரவேற்புரையாற்ற ,முதுபெரும் எழுத்தாளர் சா.கந்தசாமி சாருவின் 10 புத்தகங்களையும் வெளியிட,சிறப்புரையாற்ற வந்தவர்கள் பெற்று கொண்டனர்.(விவரங்கள் புகைப்படங்கள் வாயிலாக).
எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன், சாருவின் ” மலாவி என்றொரு தேசம் ” என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மலாவி என்ற தேசத்திற்கு போகாமல் இங்கிருந்த்படியே அந்த தேசத்தை விவரிக்கும் பாங்கு அதிசயக்கிறது என்றார்.
இயக்குனர் மிஷ்கின் ,நல்ல வாசிப்பு திறன் கொண்ட இயக்குனர் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. சரளமான நடை, சாரு மேல் கொண்ட மதிப்பு, அவரின் நந்தலாலா படம் வராமல் இருப்பதற்கான தவிப்பு , மேடையின் கீழ் உள்ள வாசகர்களை அறிவு ஜீவிகள் என்பதை சொல்லி, பல திரைப்பட துறையின் உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இயக்குனர் வசந்தபாலன் ,அமீரை பருத்தி வீரனில் கொண்டாடிய சாரு, தன்னை ஏற்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிபடுத்தினார்.
கல்கி அவர்கள் திருனங்கைகளின் இன்றைய அவலங்களை சொல்லி, அவர்களுக்கான ஆதரவையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சில் அனல் தெறித்தது. இன்றைய அரசியல் வாதிகளை நம் தலைக்குமேல் சுற்றும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் , அதை நம் தலை மேல் கூடுகட்ட அனுமதிக்ககூடாது என்று பேச்சை முடித்தார்.
திரு.அழகிய பெரியவனின் பேச்சு தலித் இன மக்களின் அவலநிலைகளையும், அவர்கள் மேல் மேற்கொள்ளபடும் அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.
திரு.ஷாஜி அவர்கள் மொழிபெயர்பின் அவசியத்தையும், சாருவின் தைரியத்தையும் பாராட்டினார்.
பதிவர்கள் துளசி கோபால், உண்மை தமிழன், சிவராமன், லக்கி லுக் , அதிஷா, பட்டர்பிளை சூர்யா, தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், வெண்பூ, முரளி கண்ணன், காவேரி கணேஷ், அப்துல்லா, டாக்டர்.புரூனோ,,D.R.அசோக், உமா ஷக்தி ,ரோமியோ பாய் மற்றும் பல எனக்கு அறிமுகம் இல்லாத பதிவர்கள் வந்தனர்.
நிகழ்ச்சி நிரல்களை திருமதி.நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்க ஏற்புரையாற்ற , திரு.சாரு மைக் அருகே வந்தபொழுது இரவு மணி 9.15, இதில் முக்கியமான விசயம் , பிலிம் சேம்பரில் இருக்கையோ 220, ஆனால் வாசகர் கூட்டம் 400 யை தொட்டது. இந்த 400 பேரும் சாருவின் ஏற்புரை 10.00 மணிக்கு முடியும் வரை இருந்தனர். வாசகர் மத்தியில் சாருவிற்கான மரியாதை தெரிந்தது.
இரவு நண்பர்களுக்கான விருந்தில் சாருவே ஒவ்வொருவரிடம் சென்று , அவர்களின் மெனுவை கேட்டு ,வரவழைத்து கொடுத்தார்.அவரின் எளிமை தான் இத்தனை வாசகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ரகசியம் புலப்பட்டது.
புத்தகம் வெளியிட்ட சா.கந்தசாமியுடன், 10 புத்தகங்களை பெற்று கொண்டவர்கள்,விழா நாயகன் சாரு
விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.
விழாவின் தொகுப்பு:
சாருவை இதற்கு முன்னர் நான் பார்த்திரவில்லை. வெள்ளியன்று நடந்த அகநாழிகை புத்தக வெளியீட்டில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு, 1/2 மணி நேரம் பல விசயங்களை விவாதித்தோம், குறிப்பாக புத்தகம் எழுதும் பழக்கம்,வாசிக்கும் பழக்கம் நம் குடும்பத்தினரிடையே எப்படி எடுத்துக்கொள்ளபடுகிறது என்பது விவாதிக்கபட்டது.
மிக எளிமையான, பந்தா இல்லாத எழுத்தாளராக k.k நகர் சாலையில் பேச்சு நீண்டது.அவரின் 10 நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழை தந்து வரும் படி அழைத்தார்.
10 நூல்களை எழுதுவது என்பது சாதாரணமான விசயமல்ல,அதோடு இந்த வருடம் மொத்தம் 90 நூல்களை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் பாராட்டதக்கது.
மனுஷ்ய புத்திரன் வரவேற்புரையாற்ற ,முதுபெரும் எழுத்தாளர் சா.கந்தசாமி சாருவின் 10 புத்தகங்களையும் வெளியிட,சிறப்புரையாற்ற வந்தவர்கள் பெற்று கொண்டனர்.(விவரங்கள் புகைப்படங்கள் வாயிலாக).
எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன், சாருவின் ” மலாவி என்றொரு தேசம் ” என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டு, மலாவி என்ற தேசத்திற்கு போகாமல் இங்கிருந்த்படியே அந்த தேசத்தை விவரிக்கும் பாங்கு அதிசயக்கிறது என்றார்.
இயக்குனர் மிஷ்கின் ,நல்ல வாசிப்பு திறன் கொண்ட இயக்குனர் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. சரளமான நடை, சாரு மேல் கொண்ட மதிப்பு, அவரின் நந்தலாலா படம் வராமல் இருப்பதற்கான தவிப்பு , மேடையின் கீழ் உள்ள வாசகர்களை அறிவு ஜீவிகள் என்பதை சொல்லி, பல திரைப்பட துறையின் உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இயக்குனர் வசந்தபாலன் ,அமீரை பருத்தி வீரனில் கொண்டாடிய சாரு, தன்னை ஏற்கவில்லை என்ற ஏக்கத்தை வெளிபடுத்தினார்.
கல்கி அவர்கள் திருனங்கைகளின் இன்றைய அவலங்களை சொல்லி, அவர்களுக்கான ஆதரவையும், அங்கீகாரத்தையும் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சில் அனல் தெறித்தது. இன்றைய அரசியல் வாதிகளை நம் தலைக்குமேல் சுற்றும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் , அதை நம் தலை மேல் கூடுகட்ட அனுமதிக்ககூடாது என்று பேச்சை முடித்தார்.
திரு.அழகிய பெரியவனின் பேச்சு தலித் இன மக்களின் அவலநிலைகளையும், அவர்கள் மேல் மேற்கொள்ளபடும் அடக்குமுறைகளையும் சுட்டிக்காட்டினார்.
திரு.ஷாஜி அவர்கள் மொழிபெயர்பின் அவசியத்தையும், சாருவின் தைரியத்தையும் பாராட்டினார்.
பதிவர்கள் துளசி கோபால், உண்மை தமிழன், சிவராமன், லக்கி லுக் , அதிஷா, பட்டர்பிளை சூர்யா, தண்டோரா, நர்சிம், கேபிள் சங்கர், வெண்பூ, முரளி கண்ணன், காவேரி கணேஷ், அப்துல்லா, டாக்டர்.புரூனோ,,D.R.அசோக், உமா ஷக்தி ,ரோமியோ பாய் மற்றும் பல எனக்கு அறிமுகம் இல்லாத பதிவர்கள் வந்தனர்.
நிகழ்ச்சி நிரல்களை திருமதி.நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்க ஏற்புரையாற்ற , திரு.சாரு மைக் அருகே வந்தபொழுது இரவு மணி 9.15, இதில் முக்கியமான விசயம் , பிலிம் சேம்பரில் இருக்கையோ 220, ஆனால் வாசகர் கூட்டம் 400 யை தொட்டது. இந்த 400 பேரும் சாருவின் ஏற்புரை 10.00 மணிக்கு முடியும் வரை இருந்தனர். வாசகர் மத்தியில் சாருவிற்கான மரியாதை தெரிந்தது.
இரவு நண்பர்களுக்கான விருந்தில் சாருவே ஒவ்வொருவரிடம் சென்று , அவர்களின் மெனுவை கேட்டு ,வரவழைத்து கொடுத்தார்.அவரின் எளிமை தான் இத்தனை வாசகர் கூட்டத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் ரகசியம் புலப்பட்டது.
விழா நாயகன் சாரு நிவேதிதா ஏற்புரை
கல்கி உரையாற்றுகிறார்
பதிவர்களின் நடுவில் பிரபல பதிவர் “ லக்கி லுக் யுவ கிருஷ்ணா”
பதிவர் புதுகை. அப்துல்லா
உயிர்மை மனுஷ்ய புத்திரன், இயக்குனர் வசந்த பாலன்.
முன் வரிசையில் பதிவர் உமா ஷக்தி
அய்யனார் கம்மா படைப்பாசிரியர் நர்சிம் ( என்னோட படத்துக்கு நீ தாம்பா ஹீரோ)
பதிவர்கள் வெண்பூ, நீரோடை முரளி கண்ணன், எண்டர் கவிஞர் கேபிள் சங்கர்.
பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, எண்டர் கவிஞர் கேபிள் சங்கர், அதிஷா
அரங்கு நிறைந்த கூட்டம், முன் வரிசையில் முதல் ஆளாய் பதிவர் தண்டோரா மணிஜி,மூன்றாவது வரிசையில் முதல் ஆளாய் பதிவர் ரோமியோ பாய்.
” நரகத்திலிருந்து ஒரு குரல்” இயக்குனர் வசந்த பாலன் பெற்று கொள்கிறார்.
” வாழ்வது எப்படி” திருமதி.செல்வி பெற்று கொள்கிறார்.
” அருகில் வராதே” இயக்குனர் மிஷ்கின் பெற்று கொள்கிறார்
” அதிகாரம் அமைதி சுதந்திரம்” திரு.பாரதி கிருஷ்ண குமார் பெற்று கொள்கிறார்.
Saturday, December 12, 2009
அகநாழிகை-புத்தக வெளியீட்டு விழா-புகைப்படங்கள்
மூத்த பதிவர்கள் பட்டர் பிளை சூர்யா, கவிஞர் கேபிள் சங்கர், தண்டோரா மணிஜி
கோவில் மிருகம் கவிதை படைப்பாசிரியர்--என்.விநாயக முருகன்
அகநாழிகை வெளீயிட்டாளர் பொன்.வாசுதேவன் தொகுப்புரை
மருத்துவர் புரூனோ, யுவகிருஷ்ணா
உமா சக்தி அய்யனார் கம்மா நாயகன் நர்சிம், ஜ்யாவரம்சுந்தர், யுவகிருஷ்ணா,யாத்ரா,டி.வி.ராதாகிருஷ்ணன்,
விழா மேடையில் ஞானி,பாஸ்கர் சக்தி.
சாருவின் கனிவான பேச்சு.
கோவில் மிருகம் கவிதை படைப்பாசிரியர்--என்.விநாயக முருகன்
அகநாழிகை வெளீயிட்டாளர் பொன்.வாசுதேவன் தொகுப்புரை
மருத்துவர் புரூனோ, யுவகிருஷ்ணா
உமா சக்தி அய்யனார் கம்மா நாயகன் நர்சிம், ஜ்யாவரம்சுந்தர், யுவகிருஷ்ணா,யாத்ரா,டி.வி.ராதாகிருஷ்ணன்,
விழா மேடையில் ஞானி,பாஸ்கர் சக்தி.
சாருவின் கனிவான பேச்சு.
Subscribe to:
Posts (Atom)