
மாலை 5.45 மணிக்கு சென்றால் , நம் பதிவர்கள் 30 பேர் வரை வந்திருந்தார்கள்.
சாருவும், அவர் மனைவி அவந்திகாவும் வந்திருந்தவர்களை உபசரித்து, மாலை நேரத்து காபியும், சமோசாவையும் சாப்பிடுமாறு மிகவும் பணித்தார்கள்.
காமராஜர் அரங்கம் போன்ற மிகபெரிய அரங்கத்தில், புத்தக வெளியீடு நடத்துவது என்பது ஒரு எந்திரன் திரைப்பட வெளியீட்டை போல செய்யவேண்டிய விசயம், அதையும் சாரு வெற்றி கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.அரங்கம் 60 சதம் நிரம்பியிருந்தது, அதிலும் முக்கியம் இரவு 10 மணி வரை வாசகர்கள் இருந்தனர் என்பது சாருவுக்கு வாசகர்கள் கொடுத்த முக்கியத்துவம் என்பதே சான்று.
எழுத்தாளர் பாலகுமாரன் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தார், அவரின் கடலோர குருவிகள் நாவலை 100 முறையாவது படித்திருப்பேன்.
உயிர்மைப்பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரன் வரவேற்புரையாற்ற,
நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்க , நல்லி அவர்கள் புத்தகம் வெளீயிட, புத்தகங்களை சாருவின் வாசக நண்பர்கள் பெற்று கொண்டது மிகச்சிறப்பு.
அதிலும், நம் நண்பர், பதிவர் நர்சிம் அவர்கள், சாருவின் சரசம், சல்லாபம், சாமியார் நித்தியானந்தர் பற்றிய புத்தகத்தை பெற்று கொண்ட பொழுது கைத்தட்டலும், விசிலும் பறந்தது.
நம் பதிவர்களின் கைத்தட்டலும், விசிலும் சாருவின் விழாவிற்கு மெருகூட்டியது எனலாம், பேச்சாளர்களின் பேச்சுகளை அவ்வளவு உற்சாகப் படுத்தினார்கள்.
வந்திருந்த பதிவர்கள்:
மணிஜி,அகநாழிகை வாசு,நித்யகுமாரன்,உண்மைதமிழன்,நர்சிம்,லக்கி,நிலாரசிகன்,அதிஷா,சாம்ராஜ்யபிரியன்,ராஜபிரியன்,ஜியரோம்சுந்தர்,
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக்,லதா மகன் இன்னும் நிறைய பேர்..
மேலும், விழா பற்றிய விபரம் அறிய நண்பர் ஜாக்கியின் தளத்தை பார்க்கலாம்.
இனி, புகைப்படங்கள்:




























சாரு அவர்களின் புத்தக வெளீயிடு விழா, டிசம்பர் மாத இசை கச்சேரி போன்று , செவிக்கும், சிந்தனைக்கும் விருந்து வைத்த விழா என்றே சொல்லலாம்.