Thursday, December 30, 2010

கவிஞர் யாத்ராவின் “மயிரு ”- கவிதை தொகுப்பு வெளியீடு-புகைப்படங்கள்.


நண்பர், பதிவர், யாத்ராவின் “மயிரு” , கவிதை தொகுப்பு அகநாழிகை பதிப்பகத்தால் மிகச்சிறப்பாக , சென்னை K.K.நகர் , டிஸ்கவரி புக் பேலஸில்,நடந்தது.

சுமார் 50 பேருடன் நடந்த இந்த விழா , வந்திருந்தவர்களின் கருத்து, பரிமாற்றத்துடன் நடந்த நிகழ்வு என சொல்லலாம்.

அகநாழிகை பதிப்பகத்தால் , நேர்த்தியாக வடிவமைக்கபட்ட தாளில்,
லேமினேட் செய்யப்பட்டு, “ மயிரு ”, கவிதை தொகுப்பு,
கவிஞர் ராஜ சுந்தரராஜன் அவர்களால் வெளியிடப்பட்டு,
பதிவர், கவிஞர் ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரையாற்ற,கவிஞர் ராஜ சுந்தரராஜன், ஜ்யோவ்ரம் சுந்தர் சிறப்புரையாற்றினர்.

கவிதை தொகுப்பின் நூலாசிரியர் யாத்ரா அவர்கள் கவிதை தொகுப்பையும், தான் கடந்து வந்த பாதையையும் எடுத்துரைத்தார்.

முடிவில், பொன்.வாசுதேவன் நன்றியுரையாற்ற விழா இனிதே முடிந்தது.

வந்திருந்த பதிவர்கள் ,

மணிஜி, கேபிள் சங்கர், சிவராமன், ஜ்யோவ்ரம் சுந்தர், பொன்.வாசுதேவன் ,
மயில் ராவணன், ஷங்கர், வசுமித்ரன், உயிரோடை லாவண்யா, நர்சிம், லக்கிலுக், அதிஷா, விமலாதித்த மாமல்லன், பெஸ்கி, சாம்ராஜ்ய பிரியன், முத்துவேல், குகன், அசோக், விஜய மகேந்திரன், புரூனோ,உழவன், இன்னும் சிலர்.

விழாவின் புகைப்படங்கள்.

அகநாழிகை பொன்.வாசுதேவன் வரவேற்புரை.
கவிஞர் ராஜ.சுந்தரராஜன் கவிதை தொகுப்பினை வெளியிட, திரு,ஜ்யோவ்ரம் சுந்தர் பெற்றுக்கொள்கிறார்

கவிஞர் ராஜசுந்தரராஜன் சிறப்புரை.

ஜ்யோவ்ரம் சுந்தர் அவர்களின் சிறப்புரை.




யாத்ரா அவர்களின் ஏற்புரை.

மயில்ராவணனுடன் , எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்.


அன்புடன்,

காவேரி கணேஷ்.