Monday, February 15, 2010

கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்

வணக்கம். ஒரு பதிவரின் புத்தக விழாவில் 150 பேர் கலந்து கொண்டார்கள் என்றால் அந்த பதிவரின் மேல் கொண்ட பாசமும், நேசமும், நட்பும் வெளிப்பட்ட தருணம் தான் கேபிளாரின் புத்தக வெளியீட்டு விழா.


13/2/2010 மாலை கேபிளாரை பார்பதற்காக தொடர்பு கொண்ட பொழுது , discovery book palaceல் இருப்பதாக தெரிவித்தார். அங்கு சென்று பார்த்தால், அந்த புத்தக கடை உரிமையாளருக்கு blog என்றால் என்ன? , பதிவு போடுவது எப்படி ?, திரட்டியில் இணைப்பது எப்ப்டி என விளக்கி கொண்டிருந்தார். இது மாதிரி எனக்கு தெரிந்த வரை 100 பதிவர்களை உருவாக்கியுள்ளார் கேபிள். பின் ஏன் 100 பதிவர்கள் விழாவுக்கு வரமாட்டார்கள்?


விழா அரங்கமே நிறைந்து காணப்பட்டது.கேபிளாரின் குடும்பத்தினர், பரிசலின் குழந்தை, வெண்பூவின் குழந்தை யென குடும்ப விழாவாகவே களை கட்டியது.
பதிவர்களை ஒருவருக்கொருவர் ஏற்கனவே பார்த்தவர்கள், chat ல் பேசி, தொலைபேசியில் பேசி அன்றுதான் நேரில் கண்டவர்கள் என நெகிழ்ச்சியாக காணப்பட்டது.

பதிவர், நாகரத்னா பதிப்பகத்தின் உரிமையாளர் குகன் தொடக்கவுரையாற்ற, கேபிள் வாழ்த்துரை வழங்க,, கேபிள் மகன் தானும் பேச வேண்டும் என கேட்க, அவன் , ஓரே வாக்கியம் பேசினான். ” எங்கப்பா ஒரு காமெடி பீசு ” என சொல்ல மொத்த கைதட்டலில் அதிர்ந்தது அந்த அரங்கம். வீட்டிலும் கேபிள் எத்துனை நகைச்சுவையாளர் என்பது புலப்பட்டது.

லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்.

பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.

பிரமிட் நடராஜன், கேபிளின் தந்தைக்கு நெருங்கிய உறவு, தான் சென்னைக்கு வந்த பொழுது, அடைக்கலம் கொடுத்தது, உதவி செய்தது என நினைவுகூர்ந்தார்.நன்றி மறப்பது நன்றன்று.

பிரமிட் நடராஜன் கேபிளின் எழுத்துக்கள் 55 வயது நிரம்பிய எழுத்தாளரின் எழுத்துக்கள் போன்று இருக்கிறது என்றார். கேபிள் தன்னை இனிமேல் யூத்து என சொல்ல மாட்டார் என நினைக்கிறேன்.



தமிழ்ப்படம் இயக்குனர் c.s.அமுதன் , தன்னுடைய படம் வெற்றிக்கு பதிவர்கள் ஒரு காரணம் என நன்றி பாராட்டினார். மிகவும் நேர்த்தியாக விமர்சனம் பதிவர்களால் எழுதப்படுகிறது என தெரிவித்தார்.

அஜயன் பாலா மிக நீண்ட உரை நிகழ்த்தினார், கேபிளின் எழுத்துக்கள் சுஜாதாவை நினைவு படுத்துகின்றன என்றவுடன் கேபிளின் முகத்தில் களிப்பு தென்பட்டது, பின்னே கேபிள் சுஜாதாவின் தீவிர ரசிகர் ஆயிற்றே.

அகநாழிகை வாசுதேவன் , கேபிளையும் , பரிசலையும் பாராட்டி, முக்கியமாக பதிப்பாளர் குகனை வாழ்த்தினார்.

கேபிள் ஏற்புரையில் லே.அவுட் டிசைனருக்கும் (இந்த புத்தகத்திற்காக 20 டிசைன் செய்தார்), பதிவர் சுகுமாரின் flash வேலைகளுக்கும், தமிழ்ப்படம் வ்சனகர்த்தா சந்துருவுக்கும் . , நன்றி கூறினார்.

பரிசலின் ஏற்புரையில் பதிவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். தொடர்ந்து எழுதினால் நிச்சயம் நம் எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்வுகளை பதிவர் சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார், தராசு, உண்மைதமிழன்,கார்க்கி ஆகியோர் எழுத்தாளர்களை பாராட்டி பேசினர்.

கலந்து கொண்ட பதிவர்கள் எனக்கு தெரிந்த வரையில்.
ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியகாரன் சிவராமன், அப்துல்லா,நர்சிம், லக்கி லுக், அதிஷா, வெண்பூ, சொல்லரசன், கார்க்கி, உண்மை தமிழன் , பட்டர் பிளை சூர்யா, மயில் ராவணன், பலாப்பட்டறை சங்கர், அன்புடன் மணிகண்டன், ஆதிமூல கிருஷ்ணன், தண்டோரா, டோண்டு ராகவன்,ரோமியோ, பெஸ்கி, ஜெயம் கொண்டான், மார்த்தாண்டன், விநாயக முருகன், சஞ்செய் காந்தி, மோகன் குமார், டி.வி ராதாகிருஷ்ணன், அண்ணாச்சி வடகரை வேலன், ச்ர்புதீன், முரளிகுமார், பத்மநாபன்,வெங்கி, சுகுமார்,அத்திரி, அதி பிரதாபன், சங்கர், வெயிலான்,சுரேகா,ஈரவெங்காயம், ஜெட்லி, சிவகுமார், மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.






கேபிளின் குழ்ந்தைகள்
பதிவர்கள் உ.த, பலாபட்டறை சங்கர், ரோமியோ பாய்.
நர்சிம், கார்க்கி
பதிவர்கள் அறிமுகம் , வெள்ளி நிலா சர்புதீன்
அன்புடன் மணிகண்டன் அறிமுக உரை, பராம்பரிய உடையுடன் நர்சிம், ஆதிமூலகிருஷ்ணன், பரிசல்.
அமர்ந்திருக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்
எழுத்தாளர் பரிசலுடன், வெண்பூ தன் மகனுடன்.
கோவை வடகரை வேலன், டி.வி.ராதாகிருஷ்ணன்.
மேடையில் வாசுதேவன், குகன், பிரமிட் நடராஜன், அஜயன்பாலா
வந்திருந்த மக்கள்.
கேபிளின் புத்தகத்தை பிரமிட் நடராஜன் வெளியீடுகிறார்.
நின்றாவாறே பரிசல், பரிசலின் பெண் புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறாள்.
பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்
கேபிளாரின் ஏற்புரை.
பிரமிட் நடராஜனின் வாழ்த்துரை.
ப்ளாஷ் வெள்ளத்தில் விழா
தொகுப்பாளர், பதிவர் சுரேகா, சிவப்பு சட்டையில் தமிழ்ப்படம் இயக்குனர் c.sஅமுதன்.
இயக்குனர் அமுதனுக்கு வடகரை வேலன் பொன்னாடை அணிவித்தார்.
c.s அமுதனின் வாழ்த்துரை
அண்ணன் தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன்.
நின்றவாறே மஞ்சள் உடையில் சிவராமன்.

நர்சிமின் அய்யனார் கம்மா வெளியிட்ட பொன், வாசுதேவனுக்கு நர்சிம் பொன்னாடை அணிவிக்கிறார்.
பொன்.வாசுதேவனின் வாழ்த்துரை.
திருப்பூர் பதிவர்கள் பரிசலுக்கு நினைவுபரிசு வழங்குகின்றனர்.
கேபிளாருக்கு சூர்யாவின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்
பரிசலுக்கு சுகுமாரின் அழகும், வண்ணமும் கொண்ட வாழ்த்து மடல்.
பரிசலின் ஏற்புரை.

தமிழ்ப்படம் வ்சனகர்த்தா, பாடலாசிரியர், பதிவர் சந்துரு
புதுகை அப்துல்லாவின் வாழ்த்துரை
அண்ணன் தராசுவின் வாழ்த்துரை
தம்பி கார்க்கியின் வாழ்த்துரை
உண்மை தமிழன் வாழ்த்துரை.

சுகுமார், பட்டர் பிளை சூர்யா அளித்த வாழ்த்து மடல்.

நிகழ்வு பற்றிய சக பதிவர்களின் பதிவுகள்.

http://tvrk.blogspot.com/2010/02/blog-post_14.html

http://veeduthirumbal.blogspot.com/


அன்புடன்

காவேரி கணேஷ்.

Tuesday, February 2, 2010

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்

ஜனவரி 31, 2010, மாதத்தின் இறுதி நாளில் மதுரையில் ஒரு நல்ல நிகழ்வை நடத்திக்காட்டியிருக்கிறார்கள் மதுரை பதிவர்கள். மனவியாளர் மருத்துவர் ஷாலினியின் பங்கேற்பில் ஒரு மகத்தான சிந்தனைகளை தூண்டும்விதமாக அமைந்திருந்தது இந்த சந்திப்பு. நண்பர் கார்த்திகை பாண்டியன், ஜயா தருமி, ஜயா சீனா அவர்களின் அழைப்பின் பேரில் மதுரை சந்திப்புக்கு சென்றிருந்தேன்.

பதிவர்கள் ஜயா சீனா, தருமி , ஜெர்ரி ஈசானந்தா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீ, சரவணன், பிரபு, வெற்றி, தேவன் மாயம், வெளியூர் பதிவர்கள் வால் பையன், ஜாபர், காவேரி கணேஷ், பெண் பதிவர் தேவி கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வை மதுரையில் நடத்த வேண்டும் என எண்ணம் கொண்டு ஜெர்மனி குமார் என்ற பதிவர் மருத்துவரை ஜெர்மனியிலிருந்து தொடர்பு கொண்டு, மருத்துவரை வரவழைத்து, நிகழ்வு முடிந்த பின்பு , கார்த்திகை பாண்டியன், தருமி அவர்களிடம் ஜெர்மனியிலிருந்து 1 மணினேரம் உரையாடி, நிகழ்வு குறித்து கேட்டறிந்தார். அவரின் முயற்சி பாராட்டதக்கது.



மதுரை அமெரிக்கன் கல்லுரி 150 வருட பாரம்பரியங்களை கொண்ட கல்லுரி, பல்வேறு கல்வியாளர்களையும்,அறிஞர்களையும், கலைஞர்களையும் உருவாக்கிய கல்லூரி. நம்முடைய பதிவர்களில் பிரபல சென்னை பதிவர்கூட இந்த கல்லுரியில் படித்தவர்.

விஸ்தாரமான , நூற்றுக்கணக்கான மரங்களை இயற்கை சூழலுடன் கொண்ட இக்கல்லுரியில் படிப்பது மதுரை, சுற்றுவட்டார மாணவர்களின் கனவு. இக்கல்லுரியில் குழந்தைகள் மன நலம், குழந்தைகள் பேணிகாப்பு,குழந்தைகள் வாழும் தற்கால சமூக சூழல் பற்றிய கருத்தரங்கம் மிகவும் சிறப்பாக தொடங்கபெற்றது.

இங்கே மருத்துவர் ஷாலினியைப்பற்றி :

காலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை வந்திறங்கியவரை, வரவேற்க வேண்டிய நம்பதிவர்கள் பக்கத்து கம்பார்ட்மெண்டில் தேடி கொண்டிருந்தனர். மருத்துவர் ஷாலினியோ யாரையும் எதிர்பார்காமல் விடுவிடுவென இறங்கி , ரயில்னிலையத்தை விட்டு நடந்து கொண்டிருந்தார்..பின்பு பதிவர்கள் கண்டறிந்து, அவருக்கு தேவையான வசதிகள் செய்துகொடுத்தனர்.


மாலை 3.30 மணியளவில் அரங்கில் 100 பேர் கூடியிருக்க ,நம் மூத்த பதிவர் சீனா அறிமுக உரையாற்ற , நண்பர் கார்த்திகை பாண்டியன் வரவேற்புரையாற்ற , மருத்துவர் ஷாலினி மேடையேறாமல், வந்திருந்த மக்களோடு இணைந்து, ஒரு கேள்வி பதில் பகுதியாக சுமார் 3 மணி நேரம் பேசினார். மிகவும் எளிமை, கலந்து கொண்டவர்களின் அருகே சென்று நட்புடன் பேசியது, எல்லா கேள்விகளுக்கும் இன்முகத்துடன் பதில், மக்களிடையே இருக்கும் தயக்கங்களை உடைத்தெறிந்து, ஆழ்மனத்தில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் மிகவும் விளக்கமாக பதிலளித்தார் .


இன்றைய வளர்ந்து வரும் பன்னாட்டு நாகரீக சூழலில் ஒவ்வாரு பெண், ஆண் குழந்தைகள் பல்வேறு வயதினரிடையே பழக வேண்டியுள்ளது. அதில் ஏறப்டும் சங்கடங்கள், வக்கிரகாரர்களின் தொடுகைகள், அந்த தொடுகைகளின் மூலம் வித்தியாசம் அறிந்து கொள்வது என்பன போன்ற குழந்தைகள் நலம் பற்றிய உரையை சுமார் 45 நிமிடம் நிகழ்த்தினார். இதிலும் முக்கியமாக ஆண்களின் வயது 25 க்குள், 65 க்கு மேல் உள்ளவர்களின் உணர்வுகளின் உந்துதல் வடிகால்கள் குழந்தைகளிடத்திலோ, பெண்களிடத்திலோ செல்வதை சரி செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.

முக்கியமாக பெண்கள் அச்சம், மடம், நாணம் , பயிர்ப்பு போன்றவற்றை தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் , வெளிசூழலில் திமிர்தல் கொள்கையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். பெண்கள் வெளியில் தைரியமாக இருக்க வேண்டும்மென்றும், எந்த சூழலிலும் ஆண்கள் தவறாக முயற்சி செய்தால் , ஆரம்பத்திலயே தட்டி கேட்டுவிட்டால் நெருங்க மாட்டார்கள் என்றும், எந்த பெண் தங்கள் மேல் காட்டப்படும் வக்கிரங்களை தட்டிகேட்காமல், அமைதியாக இருப்பவர்கள் திரும்ப, திரும்ப பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை தெரிவித்தார்.

45 நிமிட உரைக்குபின், 10 நிமிட தேனீர் இடைவேளை, பின்பு கேள்வி-பதில் பகுதி மக்கள் எழுதிக்கொடுத்த கேள்விகளை தொகுத்து, மருத்துவரிடம் கேட்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக, பல உதாரணங்களுடன் விளக்கமளித்தார். பின்பு நம் பதிவர்கள், மகளிருக்கான பிரத்யேக சந்தேகங்களை தீர்க்க எல்லா ஆடவரையும் அறையை விட்டு வெளியே வரசொல்லி , மருத்துவர்-மகளிர் உரையாடல் தொடங்கியது.

தருமி ஜயா நன்றியுரையாற்ற, வெளியூர் பதிவர்கள் வால் பையன், மருத்துவர் தேவன் மாயம் நினைவு பரிசு வழங்க நிகழ்வு நிறைவுபெற்றது. அதன் பின்னும் மருத்துவர் ஷாலினி 4 பெண்களுக்கு அவர்களின் சோகங்களுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டிருந்தார்.

இரவு மணி 7.15 , மருத்துவருக்கு இரவு 8.45 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் டிக்கெட், அப்ப்டியும் தருமி ஜயாவிடம் , மதுரை கிருத்தவ மிஷின் மருத்தவமனையில் தனக்காக ஒரு நோயாளி காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்க , ஜயா தருமி தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு புறப்படுகிறார்.

இதோ வால்பையன் , மார்ச் மாதம் ஈரோட்டிற்கு, கருத்தரங்குக்கு வரவேண்டுமென மருத்துவர் ஷாலினியிடம் கேட்கிறார், அவரும் அடுத்த் நொடியே சரி என்கிறார்.



சென்னை மருத்துவர்கள் பணம் என்ற விசயத்துக்கு பின்னால் ஒடிகொண்டிருக்கையில் , சேவை மனநலம் கொண்ட மருத்துவர்கள் நம்கண்ணில் பட்டிருப்பது ஆச்சரியம் தான்.





இனி புகைப்படங்கள்:
மேடையில் வால் பையன், கீழே ஜயா தருமி

வந்திருந்த மகளிர்
மருத்துவர் ஷாலினி
அந்தி சாயும் வேளையில் , கார்த்திகை பாண்டியன் , தருமி, சீனா, ஈரோடு ஜாபர்
கார்த்திகை பாண்டியன் நிகழ்வு உரை
தொடர்ந்து 3 மணி நேரம் நின்றவாறே மருத்துவர் ஷாலினியின் உரை

முழுமையான அரங்கம்.
தேனீர் இடைவேளை ஷாலினி, ஈரோடு ஜாபர், தருமி, ஸ்ரீ


வெள்ளை சட்டையில் ஜெர்ரி ஈசானந்தா, மருத்துவர் தேவன் மாயம்.
ஈரோட்டு பதிவர்கள் வால் பையன், ஜாபர்.
அவசரகதியில் வெயிலான்.
இளம் பதிவர் வெற்றி, ஜயா சீனா
நீல நிற உடை-- பதிவர் சரவணன் விழுதுகள்.காம்.