Saturday, June 5, 2010

பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் 05/06/2010



மெரினாவில் காந்தி சிலை

மிக நீண்ட நெடுநாட்களுக்கு பின் பதிவர் சந்திப்பு நடந்தது, மொத்தம் 35 பதிவர்கள் வந்திருந்தனர்.
மூத்த பதிவர் டோண்டு ராகவன் நோட்டு சகிதம் வந்திருந்த பதிவர்களின் வருகையை பதிவு செய்தார்.

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ள பதிவர் சிறில் அலெக்ஸ் தம்மை அறிமுகப்படுத்தி கொண்டு, மற்ற பதிவர்கள் அறிமுகபடுத்திக்கொண்டனர்.


தற்பொழுதைய பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தும் எண்ணத்திற்கான விசயங்கள் பேசப்பட்டன.

பதிவர் சிறில் , அமெரிக்க பெட்ரோல் விலையை இந்தியாவின் விலையோடு ஒப்பிட்டு பேசினார்.


பாலபாரதியும், யுவகிருஷ்ணாவும் தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கான தன்னார்வலர்களை எதிர்னோக்குவதாக அறிவித்தனர்.

தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் இணைய பதிவர்களுக்கான அரங்கம் , தமிழக அரசால் வழங்கபடுகின்றது, அவ்வமயம் வரும் தமிழ் மக்களுக்கு இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்வது எப்படி, பதிவர் ஆவது எப்படி, பதிவு எழுதுவது எப்படி என்பதனை தெரிவிக்க தன்னார்வலர்களை நம்பதிவர்களிடம் கேட்கிறார்கள்.


விருப்பபடும் பதிவர்கள் பதிவர் பாலபாரதியையும் , லக்கி யுவகிருஷ்ணாவையும் தொடர்பு கொள்ளலாம்.


மேலும் வரும் தமிழ் ஆர்வலர்களில் இணைய வசதி இல்லாதவர்களிடம் , தமிழ் சாப்ட்வேர்கள் உள்ள குறுந்தட்டுகளை இலவசமாக வழங்க உள்ளார்கள். நம்பதிவர்கள் குறுந்தட்டுகளில் தமிழ் சாப்ட்வேர்களை பதிய செய்து இலவசமாக வழங்கலாம்.



நம்பதிவர் ஜாக்கி சேகர் , மூத்த பதிவர் மா.சிவகுமார் தம்மிடம் கொடுத்த தமிழ் எழுத்துக்கள் கொண்ட கீ.போர்டு ஸ்டிக்கர்களை வழங்குவதாக அறிவித்தார்..


கூட்டம் இனிமையாகவும் , அமைதியாகவும் நிறைவு பெற்று, தேனீர்கடை நோக்கி பயணித்தது.


இனி, புகைப்படங்கள்:




பதிவர்கள் டாக்டர் புரூனோ, ஜாக்கி, பலாபட்டறை ஷங்கர், தண்டோரா, ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்,ரவிஷங்கர், அன்பு.


பதிவர்கல் விக்கி,சிறில் அலெக்ஸ்,டாக்டர் புரூனோ, ஜாக்கி


பதிவர்கள் கலந்துரையாடல்


இடமிருந்து , பதிவர் அன்பு,விக்கி, சிறில் அலெக்ஸ், புதிய பதிவர்கள்


புதிய பதிவர்கள் வருகை


சந்தோச வெள்ளத்தில் நம் பதிவர்கள்


பதிவர் ஜாக்கி சேகர், பலாபட்டறை ஷங்கர், சங்கர், ஜயா டி.வி.ராதாகிருஷ்ணன்


வெள்ளையுடையில் தண்டோரா


விரிவான கலந்துரையாடலில் பாலபாரதி, டாக்டர் புருனோ, அதிஷா, ரவிசங்கர்

கேபிளார்


இளம் பதிவர் சுகுமார்


மின்னொளியில் மெரினா


பதிவர்கள் சாம்ராஜ்ய பிரியன், அப்துல்லா


நடுவில் பலாபட்டறை சங்கர்


பதிவர்கள் சுகுமார், ஷ்ரி, ஜாக்கி சேகர்


ஜ்யோவரம் சுந்தர், டோண்டு ராகவன், லக்கிலுக்


தேனீர் கடையில் பதிவர்கள்


தல பாலபாரதி


பதிவர் அப்துல்லா சிங்கை பதிவர் ஜோசப் பால்ராஜுடன் தொலைபேசியில் பதிவர் சந்திப்பு குறித்து வர்ணனை

30 comments:

Unknown said...

அண்ணே சுடச்சுட பதிவு போட்டு அசத்திட்டீங்க....

நன்றி..

ராம்ஜி_யாஹூ said...

u r super fast, thanks for photos and instant sharing.

Sukumar said...

அண்ணே... மின்னல் வேக பதிவுண்ணே... கலக்கல் புகைப்படங்கள்... என்னை இளம் பதிவர்னு சொன்ன்துக்கு ரொம்ப தேங்க்ஸ்ண்ணே....

மின்னுது மின்னல் said...

படங்கள் கலக்கல் ::)

Unknown said...

OVER BUILD-UP

ராம்ஜி_யாஹூ said...

waiting to read Dondu's post, it will start as- when Car reaches it was 6.10.....

வவ்வால் said...

Puyal adikkum kalathil pathivar santhipu,puyal vegathil ungal pathivu arumai. Natpu Payanam thodara vazhthukal!

Jackiesekar said...

தலைவரே நல்லா தொகுத்து இருக்கிங்க.. உங்க புகைபடத்தை நான் என் வலைதளத்தில் பயன்படுத்திக்கொண்டுவிட்டேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் போட்டோ சரியா தெரியல. நான் கோவமா கிளம்புறேன்.

தேங்க்ஸ்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தல பாலபாரதி படம் நல்லா வந்துருக்கு!

35 பேரா? வியப்பா இருக்கு!

ஜோசப் பால்ராஜ் said...

ஆல்வேஸ் யூத் கேபிள்ஜி இருக்கும்போது எப்படி இன்னொரு பதிவர இளம்பதிவர்னு சொல்லிருக்கிங்க?
இத எதிர்த்து விரைவில் குழு அமைச்சு போராட போறோம்.
தொடர் பதிவுகள் வெளிவரும்

மனப்பூர்வமா உடனே மன்னிப்பு கேட்டேயாகனும்.

Cable சங்கர் said...

ஆமா அண்ணன் சென்னை வரும் போது க்ரீன் பார்க்குல பார்ட்டி வச்சி சொல்லணும்.. அது...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

Cable Sankar said...
ஆமா அண்ணன் சென்னை வரும் போது க்ரீன் பார்க்குல பார்ட்டி வச்சி சொல்லணும்.. அது...
//

அப்ப தம்பி ஜோசப் உங்களுக்கு அண்ணனா?

:)))

Unknown said...

மற்ற ஊர்களிலும் இதுபோல் நடத்துங்கப்பு.

Sukumar said...

அண்ணே.. பதிவர் சந்திப்பின் எனது புகைப்படங்கள்
http://valaimanai.blogspot.com/2010/06/blog-post.html

Ganesan said...

மிக்க நன்றி கே.ஆர்.பி.செந்தில்

நன்றி ராம்ஜி..

இளமையானவர் தானே சுகுமார்.

நன்றி மின்னல்

Ganesan said...

Blogger ஆண்டாள்மகன் said...

OVER BUILD-UP

சிக்ஸ் பேக் மாதிரியா இருக்கு

Ganesan said...

Blogger வவ்வால் said...

Puyal adikkum kalathil pathivar santhipu,puyal vegathil ungal pathivu arumai. Natpu Payanam thodara vazhthukal!

பதிவர்களின் நட்பு பயணம் என்றும் நிலைக்கும்.

Ganesan said...

மிக்க நன்றி ஜாக்கி.

ரமேஷ் , கோபப்படாதீங்க , பாத்து நல்ல படமா அனுப்புங்க, தளத்தில் போட்றேன்.

ஆமாம் .ஜோதி பாரதி , 35 பேர் வருகை தந்தனர், அதிலும் 4 பேர் வாசகர்கள், ஒருவர் மும்பை காரர்

Unknown said...

JyovRam Sundar's Nose is in good shape, good recovery...

Expected some positive discussions to finally resolve amicably the hot events of the past week-

Mullai+Deepa + Viji Vs Narsim and

also

Sivaraman + Vinavu Vs Suguna Diwakar + Mangalore Siva + Abi Appa...

disappointed that no one took any lead to sort these matters out.after arriving at a consensus on this,Some one could have called Mullai and Muhil from the meeting, expressed the sentiment of the tamil blogger world to her that while everyone condemns Narsim wholeheartedly, they also feel that there is no point in getting too much influenced by Sivaraman & Vinavu in setting terms for a resolution of this vexing issue.if Mullai & Mihil agree to come down from the demands set by Vinavu, to the reasonable points raised by Unmai Thamizhan in his blog, then
same blogger could have called Narsim from the spot and arrange a meeting to settle the issue immediately.

discussing about petrol price and other issues are not so important as Narsim-Mullai-Vinavu-Siva-Suguna issue.the sooner this is done with, the better it would be for the Tamil bloggers's reputation or whatever little left there!

Ganesan said...

வாங்க ஜோசப் , இந்த மாதம் சென்னை வர்றீங்க தானே, மவுண்ட் ரோடுல வச்சு மன்னிப்பு கேட்றேன்.


Blogger Cable Sankar said...

ஆமா அண்ணன் சென்னை வரும் போது க்ரீன் பார்க்குல பார்ட்டி வச்சி சொல்லணும்.. அது...


பார்ட்டிதானே வச்சுருவோம், அப்புறம் ஒருவருசம் கழித்து நான் பார்ட்டி வச்சு உங்கள கைகூலியா ஆக்கிட்டேன் யாராவது எழுதுவாங்க அப்பு.

Ganesan said...

வருகைக்கு நன்றி கலா நேசன்.

Ganesan said...

சுகுமார்,

தனிதிறமை பெற்றவர் நீங்கள்..

உங்கள் ப்ளாஷ் பகுதி நன்றாக உள்ளது.

வாழ்த்துக்கள்

Jerry Eshananda said...

உங்க போட்டோ எங்கப்பு.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

புகைபடத்துடன் கூடிய விளக்கம் மிக நேர்த்தியாக இருந்தது! அருமை!!

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

புகைபடத்துடன் கூடிய விளக்கம் மிக நேர்த்தியாக இருந்தது! அருமை!!

Ganesan said...

வாங்க ஜெரி , எப்படியுள்ளீர்கள்.
என் போட்டா எடுக்க மறந்திட்டேன்.

நன்றி சலீம்.

SHARFUDEEN said...

Thanks ganesh!

butterfly Surya said...

நன்றி கணேஷ்.

ஊரில் இல்லை. இன்று தான் திரும்பினேன். Missed you all.

Ganesan said...

நன்றி சர்பூதின்.

நன்றி சூர்யா, பார்க்க விழைகிறேன்.